வழிபாடு
திருப்பதியில் மகாசாந்தி யாகம் 12-ந்தேதி தொடங்குகிறது
உலக நன்மைக்காக வேண்டி திருப்பதியில் உள்ள ராமச்சந்திரா புஷ்கரணியில் 12-ந்தேதியில் இருந்து 14-ந்தேதி வரை 3 நாட்கள் மகாசாந்தி யாகம் நடக்கிறது.
திருமலை, பிப்.10-
உலக நன்மைக்காக வேண்டியும், கொரோனா தொற்று பரவாமல் குறைய வேண்டியும் திருப்பதியில் உள்ள ராமச்சந்திரா புஷ்கரணியில் 12-ந்தேதியில் இருந்து 14-ந்தேதி வரை 3 நாட்கள் மகாசாந்தி யாகம் நடக்கிறது.
திருப்பதி கோதண்டராமர் கோவில் அதிகாரிகள் மேற்பார்வையில் மகாசாந்தி யாகத்தை வைகானச ஆகம பண்டிதர் பி.சீதாராமச்சாரியார் கங்கணப்பட்டராக செயல்பட்டு நடத்துகிறார்.