செய்திகள்
புதுச்சேரி சட்டபேரவை

புதுச்சேரி சட்டசபை சிறப்பு கூட்டம் 22-ந்தேதி காலை 10 மணிக்கு கூடுகிறது

Published On 2021-02-19 17:14 GMT   |   Update On 2021-02-19 17:14 GMT
புதுச்சேரி சட்டசபை சிறப்பு கூட்டம் வருகிற 22-ந்தேதி காலை 10 மணிக்கு கூடும் என பேரவை செயலாளர் முனுசாமி தெரிவித்துள்ளார்.
புதுச்சேரி மாநிலத்தில் நாராயணசாமி தலைமையிலான காங்கிரஸ் கட்சி ஆட்சி செய்து வருகிறது. திமுக மற்றும் சுயேட்சை எம்.எல்.ஏ.-க்கள் ஆதரவு அளித்து வருகின்றனர்.

காங்கிரஸ் எம்.எல்.ஏ.-க்கள் நான்கு பேர் ராஜினாமா செய்துள்ளனர். ஒருவர் எம்எல்ஏ பதவியில் இருந்து தகுதி நீக்கம் செய்யப்பட்டுள்ளார். இதனால் நாராயணசாமி தலைமையிலான அரசு மெஜாரிட்டியை இழந்துவிட்டது என பொறுப்பு ஆளுநர் தமிழிசை சவுந்தரராஜனிடம் எதிர்க்கட்சிகள் முறையிட்டனர்.

இதனால் வருகிற 22-ந்தேதி மாலை 5 மணிக்குள் நாராயணசாமி அரசு மெஜாரிட்டியை நிரூபிக்க வேண்டும் என ஆளுநர் உத்தரவிட்டார்.

இந்த நிலையில் வருகிற 22-ந்தேதி காலை 10 மணிக்கு புதுச்சேரி சட்டசபை சிறப்புக் கூட்டம் கூடும் என பேரவை செயலாளர் முனுசாமி தெரிவித்துள்ளார். அப்போது நாராயணசாமி மெஜாரிட்டியை நிரூபிப்பார்.
Tags:    

Similar News