செய்திகள்
விபத்து பலி

அரியலூர் அருகே வாகனம் மோதி முதியவர் பலி

Published On 2021-07-28 14:26 GMT   |   Update On 2021-07-28 14:26 GMT
அரியலூர் அருகே வாகனம் மோதி முதியவர் பலியான சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
அரியலூர்:

அரியலூர் புறவழிச்சாலையில் பழைய இரும்புக்கடை வைத்திருப்பவர் நடராஜன்(வயது 75). இவர் நேற்று முன்தினம் இரவு தனது கடையில் இருந்து சைக்கிளில் தவுத்தாய்குளம் நோக்கி சென்றார். அப்போது அவர் மீது, அந்த வழியாக சென்ற வாகனம் மோதியது. இதில் பலத்த காயம் அடைந்த நடராஜன் அதே இடத்தில் பரிதாபமாக இறந்தார். இது குறித்து தகவல் அறிந்த அரியலூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் மணிவண்ணன் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து, நடராஜனின் உடலை கைப்பற்றி அரியலூர் அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தார். மேலும் அவர் மீது மோதிய வாகனம் குறித்து விசாரணை நடத்தி வருகிறார்.
Tags:    

Similar News