செய்திகள்
திருமாவளவன்

பாஜகவின் வேல் யாத்திரைக்கு தடை விதிக்க வேண்டும் - திருமாவளவன் கோரிக்கை

Published On 2020-10-29 14:22 GMT   |   Update On 2020-10-29 14:22 GMT
பாஜகவினரின் வேல் யாத்திரைக்கு தமிழக அரசு அனுமதி அளிக்கக் கூடாது என்று விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன் கூறியுள்ளார்.
சென்னை:

விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன் கூறியிருப்பதாவது,

தமிழகத்தில் பாஜகவினரின் வேல் யாத்திரைக்கு தமிழக அரசு அனுமதி அளிக்கக் கூடாது. சட்டம்- ஒழுங்கு பிரச்சினை ஏற்படும் என்பதால் வேல் யாத்திரைக்கு தடைவிதிக்க வேண்டும். இதேபோல் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் அக்கட்சியின் மாநிலச் செயலாளர் கே.பாலகிருஷ்ணன் இதே கருத்தை வலியுறுத்தியுள்ளார்.

கொரோனா தொற்று சூழலில் பாஜகவினரின் வேல் யாத்திரைக்கு அனுமதி தந்தால் நோயை பரப்புவதாக அமையும். பேரிடர் கால கட்டுப்பாடுகளை மீறி நடத்தப்படும் வேல் யாத்திரைக்கு தடை விதிக்க வேண்டும் என்று கூறியுள்ளார்.
Tags:    

Similar News