செய்திகள்
உடல் உறுப்பு தானத்தில் தமிழகம் 5-வது முறையாக முதல் இடம்
உடல் உறுப்பு தானத்தில் தமிழகம் முதல் இடம் பெற்றமைக்கான விருது உள்ளிட்ட மூன்று தேசிய அளவிலான விருதுகளை மத்திய மந்திரி ஹர்ஷவர்தன் வழங்கினார்
புதுடெல்லி:
டெல்லியில் 10-வது இந்திய உடல் உறுப்பு தான தின விழா நடந்தது. உடல் உறுப்பு தானத்தில் தமிழகம் முதல் இடம் பெற்றமைக்கான விருது உள்ளிட்ட மூன்று தேசிய அளவிலான விருதுகளை, மத்திய சுகாதாரம் மற்றும் குடும்பநலத்துறை மந்திரி ஹர்ஷவர்தன், இணை-மந்திரி அஷ்வினி குமார் சவுபே ஆகியோர், தமிழக சுகாதாரத்துறை அமைச்சர் டாக்டர் சி. விஜயபாஸ்கரிடம் வழங்கினார்.
நிகழ்ச்சியில் தமிழக சுகாதாரத்துறை செயலாளர் டாக்டர் பீலா ராஜேஷ், நோட்டோ இயக்குனர் டாக்டர். வசந்தி ரமேஷ் உள்பட சுகாதாரத்துறை அதிகாரிகள் பலர் கலந்து கொண்டனர்.
டெல்லியில் 10-வது இந்திய உடல் உறுப்பு தான தின விழா நடந்தது. உடல் உறுப்பு தானத்தில் தமிழகம் முதல் இடம் பெற்றமைக்கான விருது உள்ளிட்ட மூன்று தேசிய அளவிலான விருதுகளை, மத்திய சுகாதாரம் மற்றும் குடும்பநலத்துறை மந்திரி ஹர்ஷவர்தன், இணை-மந்திரி அஷ்வினி குமார் சவுபே ஆகியோர், தமிழக சுகாதாரத்துறை அமைச்சர் டாக்டர் சி. விஜயபாஸ்கரிடம் வழங்கினார்.
நிகழ்ச்சியில் தமிழக சுகாதாரத்துறை செயலாளர் டாக்டர் பீலா ராஜேஷ், நோட்டோ இயக்குனர் டாக்டர். வசந்தி ரமேஷ் உள்பட சுகாதாரத்துறை அதிகாரிகள் பலர் கலந்து கொண்டனர்.