செய்திகள்
ராகுல் காந்தி

ராகுல் காந்தி அடுத்த மாதம் புதுவை வருகிறார்

Published On 2021-01-22 07:20 GMT   |   Update On 2021-01-22 07:20 GMT
புதுவை காங்கிரசாரின் அழைப்பை ஏற்றுள்ள ராகுல் காந்தி அடுத்த மாதம் புதுவைக்கு வருவதாக தெரிவித்து உள்ளார்.
புதுச்சேரி:

புதுவை, தமிழக சட்டசபைக்கு விரைவில் தேர்தல் நடைபெற உள்ளது. தேர்தல் பணியில் அரசியல் கட்சியினர் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர்.

அகில இந்திய காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி நாளை தமிழகம் வருகிறார்.

கோவையில் சிறு, குறு தொழில் முனைவோர்களை அவர் சந்தித்து ஆலோசனை நடத்துகிறார்.

திருப்பூரில் நாளை மறுநாள் நெசவாளர்களை சந்தித்து குறைகளை கேட்டறிகிறார். அன்று மாலை தாராபுரத்தில் நடைபெறும் பொதுக்கூட்டத்தில் பேசுகிறார்.

இந்த நிலையில் டெல்லியில் காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தியை முதல்- அமைச்சர் நாராயணசாமி, வைத்திலிங்கம் எம்.பி., மாநில காங்கிரஸ் தலைவர் ஏ.வி.சுப்பிரமணியன் ஆகியோர் நேற்று மாலை சந்தித்து பேசினர்.

அப்போது புதுவை மாநில அரசியல் நிலவரம், கூட்டணி கட்சிகள் தொடர்பாக விளக்கி கூறினர். தேர்தல் பணிகள் குறித்து பல்வேறு ஆலோசனைகளை ராகுல் தெரிவித்தார்.

புதுவையில் தேர்தல் பிரசாரம் செய்ய வர வேண்டும் என அவரிடம் கோரிக்கை வைத்தனர். புதுவை காங்கிரசாரின் அழைப்பை ஏற்ற ராகுல் அடுத்த மாதம் புதுவைக்கு வருவதாக தெரிவித்து உள்ளார்.
Tags:    

Similar News