உள்ளூர் செய்திகள்
உடுமலை அரசு கல்லூரியில் 45 ஆண்டுகளுக்கு முன் படித்த மாணவர்கள் சந்திப்பு
முன்னாள் மாணவர்கள் அனைவரும் தங்களுடைய பழைய நினைவுகளை பகிர்ந்து மகிழ்ச்சியடைந்தனர்.
உடுமலை:
உடுமலை அரசு கலைக் கல்லூரியில் 1977ம் ஆண்டு பி.காம்., பாடத்தில் அதிகப்படியான மாணவர்கள் படித்தனர். தங்களுடன் படித்தவர்களை சந்திக்க வேண்டும் என்ற ஆர்வத்தில் சில நண்பர்கள், முன்னாள் மாணவர்கள் சந்திப்புக்கு ஏற்பாடு செய்தனர்.
அவ்வகையில் உடுமலை அரசு கலைகல்லூரி வளாகத்தில் சந்திப்பு நிகழ்ச்சி நடந்தது. இதில் 25 பேர் பங்கேற்றனர். ஓய்வு பெற்ற ஏ.டி.எஸ்.பி., காஜாமைதீன் முன்னிலையில் வக்கீல் ராஜேந்திரன் தலைமை வகித்தார். முன்னதாக கனகராஜன் வரவேற்றார்.
கோபால், சண்முகம், கண்ணப்பன், ஜெயமாணிக்கம், முத்துவேல்முருகன் ஆகியோர் விழாவை தொடங்கி வைத்தனர். தொடர்ந்து தங்களுடன் படித்த மறைந்த நண்பர்களுக்கு மவுன அஞ்சலி செலுத்தப்பட்டது. கல்லூரி முதல்வர் கல்யாணி, முன்னாள் மாணவர்களை வாழ்த்திப்பேசினார்.
அதேபோல் ‘கடந்து வந்த பாதை’ என்ற தலைப்பில் முன்னாள் மாணவர்கள் அனைவரும் தங்களுடைய பழைய நினைவுகளை பகிர்ந்து மகிழ்ச்சியடைந்தனர். முடிவில் தியாகராஜன் நன்றி கூறினார்.