செய்திகள்
பெரம்பலூர் அருகே வாகனம் மோதி விவசாயி பலி
பெரம்பலூர் அருகே வாகனம் மோதி விவசாயி பலியான சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
பாடாலூர்:
பெரம்பலூர் மாவட்டம் ஆலத்தூர் தாலுகா இரூர் கிராமத்தை சேர்ந்தவர் ரெங்கநாதன் (வயது 50). விவசாயியான இவர் ஆலத்தூரில் உறவினர் வீட்டு துக்க நிகழ்ச்சியில் பங்கேற்று விட்டு மோட்டார் சைக்கிளில் இரூருக்கு வந்து கொண்டிருந்தார். அப்போது, இரூருக்கு செல்லும் வழியில் திருச்சி-சென்னை தேசிய நெடுஞ்சாலையை கடக்க முயன்ற போது, அவர் மீது ஒரு வாகனம் மோதிவிட்டு நிற்காமல் சென்று விட்டது. இதில் படுகாயம் அடைந்த ரெங்கநாதன் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.
இது குறித்து பாடாலூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து ரெங்கநாதன் மீது மோதிவிட்டு நிற்காமல் சென்ற வாகனத்தை தேடி வருகின்றனர். மேலும் இறந்தவரின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக பெரம்பலூர் அரசு தலைமை மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.