செய்திகள்
வாகன சோதனை

திருப்பத்தூரில் உரிய ஆவணமின்றி எடுத்துச் சென்ற ரூ.3 லட்சத்து 63 ஆயிரம் பறிமுதல்

Published On 2021-04-04 13:44 GMT   |   Update On 2021-04-04 13:44 GMT
திருப்பத்தூர் தாலுகா கொரட்டி பகுதியில் திருப்பத்தூர் சட்டமன்ற தேர்தல் நிலை கண்காணிப்பு குழுவினர் சோதனையில் ஈடுபட்டனர்.
திருப்பத்தூர்:

திருப்பத்தூர் தாலுகா கொரட்டி பகுதியில் திருப்பத்தூர் சட்டமன்ற தேர்தல் நிலை கண்காணிப்பு குழுவினர் சோதனையில் ஈடுபட்டனர். அப்போது திருவண்ணாமலை மாவட்டம் கலசபாக்கம் தாலுகா அருந்ததியர் பகுதியை சேர்ந்த செல்வமணி (வயது 38) என்பவர் உரிய ஆவணமின்றி காரில் எடுத்துச்சென்ற 1 லட்சத்து 27 ஆயிரத்து 200 ரூபாயை பறிமுதல் செய்தனர்.

திருப்பத்தூர் தாலுகா நரியனேரி கிராமத்தில் நிலை கண்காணிப்பு குழுவினர் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்த போது, பிரசாந்த் (26) என்பவர் மோட்டார் சைக்கிளில் உரிய ஆவணமின்றி எடுத்து வந்த ரூ.1 லட்சத்து 69 ஆயிரத்து 800 பறிமுதல் செய்யப்பட்டது.

திருப்பத்தூர் தாலுகா கொரட்டி கிராமத்தில் நிலை கண்காணிப்பு குழு வாகன சோதனையில் ஈடுபட்டிருந்த போது, ஞானப்பழம் (43) என்பவர் மோட்டார் சைக்கிளில் உரிய ஆவணமின்றி எடுத்து வந்த ரூ.62 ஆயிரத்து 800 பறிமுதல் செய்யப்பட்டது.
Tags:    

Similar News