செய்திகள்
கைது

ராமநாதபுரம் மாவட்டத்தில் மதுவிற்ற 12 பேர் கைது

Published On 2021-01-13 15:07 GMT   |   Update On 2021-01-13 15:07 GMT
ராமநாதபுரம் மாவட்டத்தில் மதுவிற்ற 12 பேரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
ராமநாதபுரம்:

ராமநாதபுரம் மாவட்டத்தில் அரசால் தடைசெய்யப்பட்ட புகையிலை விற்பனையை தடுப்பதோடு மதுவிற்பனை செய்வதை தடுத்து வழக்குபதிவு செய்ய மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு கார்த்திக் உத்தரவிட்டுள்ளார். இதன்படி மாவட்ட மதுவிலக்கு போலீசார் மற்றும் அந்தந்த பகுதி போலீசார் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டனர். இதன்படி மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் மதுவிற்பனை செய்ததாக 12 பேரை போலீசார் கைது செய்தனர். இதுதவிர, மாவட்டம் முழுவதும் பல்வேறு பகுதிகளில் அரசால் தடைசெய்யப்பட்ட புகையிலை பொருட்களை விற்பனை செய்ததாக 7 பேரை போலீசார் கைது செய்தனர். இவர்களிடம் இருந்து கட்டுக்கட்டாக புகையிலை பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டன.
Tags:    

Similar News