செய்திகள்
கோவை அருகே வாலிபர் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
போத்தனூர்:
கோவை சுந்தராபுரம் பகுதியை அஷ்டலட்சுமி நகரைச் சேர்ந்தவர் பாலகிருஷ்ணன். இவரது மகன் ஆனந்தன் (வயது31).இவர் தனியார் தொழிற்சாலையில் ஆபரே ட்டராக பணிபுரிந்து வந்தார். கொரோனா காரணமாக கடந்த சில மாதங்களாக வேலை இழந்து வீட்டுக்கு வாடகை கூட கொடுக்க முடியாமல் விரக்தியில் இருந்துள்ளார். இந்த நிலையில் மனைவி, குழந்தைகளை தனது பாட்டி வீட்டிற்கு அனுப்பி வைத்து வீட்டில் தற்கொலை செய்து கொண்டனார். போத்தனூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.