செய்திகள்
பாம்பு கடித்து பெண் பலி

களக்காடு அருகே பாம்பு கடித்து பெண் பலி

Published On 2020-02-11 12:02 GMT   |   Update On 2020-02-11 12:02 GMT
களக்காடு அருகே வயல் வரப்பில் நடந்து சென்ற பெண்ணை பாம்பு கடித்ததில் பரிதாபமாக உயிரிழந்தார்.

களக்காடு:

களக்காடு அருகே உள்ள ஊச்சிக்குளத்தை சேர்ந்தவர் ராமசுப்பிரமணியன் (வயது 45). தொழிலாளி. இவரது மனைவி தங்கரத்தினம் (44). இவர்களுக்கு 1 மகன் உள்ளார். 

இந்நிலையில் சம்பவத்தன்று தங்கரத்தினம் கல்லடி சிதம்பரபுரத்திற்கு வயலில் களை எடுக்கும் பணிக்காக சென்றார். வயலில் களை எடுத்து விட்டு வயல் வரப்பில் சாப்பிடுவதற்காக நடந்து வந்த போது அவரை பாம்பு கடித்தது.

இதில் படுகாயமடைந்த அவரை உறவினர்கள் மீட்டு களக்காடு அரசு மருத்துவ மனைக்கு கொண்டு சென்றனர், அங்கு முதலுதவி சிகிச்சைக்கு பின் அவரை நெல்லை அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். ஆனால் செல்லும் வழியிலேயே தங்கரத்தினம் பரிதாபமாக இறந்தார். 

இது குறித்து புகாரின் பேரில் களக்காடு போலீசார் வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags:    

Similar News