செய்திகள்
எடப்பாடி பழனிசாமி

நாட்டறம்பள்ளியில் இன்று நடைபெற இருந்த எடப்பாடி பழனிசாமி பிரசாரம் திடீர் ரத்து

Published On 2021-04-03 07:01 GMT   |   Update On 2021-04-03 07:01 GMT
வேலூர், ராணிப்பேட்டை, திருப்பத்தூர் மாவட்டத்தில் அ.தி.மு.க. பெரிய தலைவர்கள் யாரும் தேர்தல் பிரசாரத்திற்கு வரவில்லை.
நாட்டறம்பள்ளி:

முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி திருப்பத்தூர் மாவட்டம் நாட்டறம்பள்ளியில் இன்று காலை பிரசாரம் செய்வதாக அறிவிக்கப்பட்டிருந்தது.

அவர் வேலூர், ராணிப்பேட்டை, திருப்பத்தூர் மாவட்டங்களில் உள்ள 13 தொகுதிகளில் போட்டியிடும் அ.தி.மு.க. மற்றும் கூட்டணி கட்சி வேட்பாளர்களை ஆதரித்து பிரசாரம் செய்வார் என்று தெரிவிக்கப்பட்டிருந்தது.

இந்த நிலையில் இன்று காலை முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமியின் நாட்டறம்பள்ளி பிரசாரம் திடீரென ரத்து செய்யப்பட்டுள்ளது.

இதேபோல் கடந்த 25-ந்தேதி துணை முதல்-அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் வேலூர் மாவட்டத்தில் பிரசாரம் செய்வார் என அறிவிக்கப்பட்டிருந்தது. அவர் வருகையும் திடீரென ரத்து செய்யப்பட்டது.

வேலூர், ராணிப்பேட்டை, திருப்பத்தூர் மாவட்டத்தில் அ.தி.மு.க. பெரிய தலைவர்கள் யாரும் தேர்தல் பிரசாரத்திற்கு வரவில்லை.

ராமதாஸ் மற்றும் அன்புமணி அ.தி.மு.க., பா.ம.க. மற்றும் கூட்டணி கட்சி வேட்பாளர்களை ஆதரித்து பிரசாரம் செய்தனர்.
Tags:    

Similar News