செய்திகள்
தற்கொலை

பண்ருட்டி அருகே விஷம் குடித்து விவசாயி தற்கொலை

Published On 2021-04-08 17:31 GMT   |   Update On 2021-04-08 17:31 GMT
பண்ருட்டி அருகே கடன் தொல்லையால் விவசாயி விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டார். இது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
பண்ருட்டி:

பண்ருட்டி அருகே நடுக்குப்பம் கிராமத்தை சேர்ந்தவர் கிருஷ்ணமூர்த்தி (வயது 40) விவசாயி. இவருடைய முதல் மனைவி ஸ்ரீதேவி. இவர்களுக்கு ஒரு மகன், ஒரு மகள் உள்ளனர். கிருஷ்ணமூர்த்தியின் 2-வது மனைவி பிரபாவதி. இந்த நிலையில் கிருஷ்ணமூர்த்தி பலரிடம் கடன் வாங்கியுள்ளார். அந்த பணத்தை திருப்பி கொடுக்க முடியாமல் அவர் சிரமப்பட்டு வந்தார். இதனிடையே கடன் கொடுத்தவர்கள் தங்களது பணத்தை திருப்பி தருமாறு கிருஷ்ணமூர்த்தியிடம் அடிக்கடி கேட்டு வந்துள்ளனர். கடன் தொல்லையால் மனமுடைந்த கிருஷ்ணமூர்த்தி வீட்டில் இருந்த விஷத்தை எடுத்து குடித்துவிட்டார்.

இதில் மயங்கி விழுந்த அவரை அக்கம் பக்கத்தினர் மீட்டு சிகிச்சைக்காக பண்ருட்டி அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு டாக்டர்கள் தீவிர சிகிச்சை அளித்தும் பலனின்றி கிருஷ்ணமூர்த்தி பரிதாபமாக இறந்தார். இது குறித்த புகாரின் பேரில் முத்தாண்டிக்குப்பம் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் ராஜேந்திரன் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.
Tags:    

Similar News