செய்திகள்
ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்களை படத்தில் காணலாம்.

கட்டுமான தொழிலாளர் சங்கம் சார்பில் மனு கொடுக்கும் போராட்டம்

Published On 2021-10-18 10:26 GMT   |   Update On 2021-10-18 10:26 GMT
கட்டுமான தொழிலாளர்களுக்கு அரசு தீபாவளி போனசாக ரூ..5 ஆயிரம் வழங்க வேண்டும் என கோரிக்கை விடுத்து கோஷம் எழுப்பினர்.
திருப்பூர்:

திருப்பூர் மாவட்ட கட்டிட கட்டுமான தொழிலாளர் சங்கத்தினர் திருப்பூர் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் இன்று மனு கொடுக்கும் போராட்டத்தில் ஈடுபட்டனர்.  

அவர்கள் கொடுத்துள்ள மனுவில், திருப்பூர் மாவட்டம் முழுவதும் நலவாரியத்தில் பதிவு செய்துள்ள கட்டிட கட்டுமான தொழிலாளர்களுக்கு அரசு தீபாவளி போனசாக ரூ.5 ஆயிரம் வழங்க வேண்டும், அடுக்குமாடி குடியிருப்பில் வீடு கட்டித்தர வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி இருந்தனர். மேலும் கோரிக்கைகளை  வலியுறுத்தி கோஷம் எழுப்பினர்.
Tags:    

Similar News