செய்திகள்
ரோகித் சர்மா

100-வது டி20 போட்டியில் விளையாடும் முதல் இந்திய வீரர் ஹிட்மேன்

Published On 2019-11-06 09:25 GMT   |   Update On 2019-11-06 09:25 GMT
வங்காளதேசத்திற்கு எதிரான 2-வது டி20 போட்டியில் விளையாடுவதன் மூலம், 100-வது போட்டியில் விளையாடும் முதல் இந்திய வீரர் என்ற பெருமையை பெறுகிறார் ரோகித் சர்மா.
  • சோயிப் மாலிக் 111 போட்டிகளில் விளையாடி முதல் இடம்
  • ஷாகித் அப்ரிடி 99 போட்டிகளில் விளையாடியுள்ளார்.
  • எம்எஸ் டோனி 98 போட்டிகளில் விளையாடி 3-வது இடம்
இந்திய அணியின் முன்னணி பேட்ஸ்மேன்களில் ஒருவர் ரோகித் சர்மா. வங்காளதேசத்துக்கு எதிரான 20 ஓவர் போட்டியில் கேப்டன் விராட் கோலிக்கு ஓய்வு கொடுக்கப்பட்டு உள்ளதால் அவர் அணியை வழி நடத்தி செல்கிறார்.

நாளைய போட்டி ரோகித் சர்மாவுக்கு 100-வது 20 ஓவர் ஆட்டமாகும். 100-வது போட்டியில் விளையாட இருக்கும் முதல் இந்திய வீரர் ஆவார். சர்வதேச அளவில் 2-வது வீரர் என்ற பெருமையை பெறுகிறார். பாகிஸ்தான் வீரர் சோயிப் மாலிக் ஒருவர் மட்டுமே 100 இருபது ஓவர் ஆட்டத்தில் விளையாடி இருக்கிறார்.

சோயிப் மாலிக் 111 ஆட்டத்தில் விளையாடி 2263 ரன் எடுத்துள்ளார். ரோகித் சர்மா 99 போட்டியில் 2452 ரன் எடுத்துள்ளார். அப்ரிடி 99 ஆட்டத்திலும், டோனி 98 ஆட்டத்திலும் விளையாடி உள்ளனர். விராட் கோலி 93 போட்டியில் ஆடியுள்ளார்.
Tags:    

Similar News