ஆன்மிகம்
ரெங்கநாதர் கோவிலில் பங்குனி தேரோட்டம் நடந்தபோது எடுத்த படம். (உள்படம்:-சிறப்பு அலங்காரத்தில் நம்பெருமாள்)

ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோவில் பங்குனி தேரோட்டம்

Published On 2021-03-30 06:17 GMT   |   Update On 2021-03-30 06:17 GMT
ஸ்ரீரங்கம் ரெங்கநாதர்கோவில் தேரோட்டம் நடைபெற்றது. இதில் ஏராளமான பக்தர்கள் பங்கேற்று தேரை வடம்பிடித்து இழுத்தனர்.
பூலோக வைகுண்டம் எனப்படும் ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோவில் பங்குனி தேர்த்திருவிழா கடந்த 20-ந் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. திருவிழாவின் 9-ம் நாளான நேற்று முன் தினம் நம்பெருமாள் ரெங்கநாச்சியாருடன் சேர்த்தி சேவை கண்டருளினார்.

விழாவின் சிரக நிகழ்ச்சியான நேற்று பங்குனி தேரோட்டம் நேற்று நடைபெற்றது. முன்னதாக அதிகாலை 5.45 மணி அளவில் நம்பெருமாள் தாயார் சன்னதியில் இருந்து கோரதம் என்னும் பங்குனிதேர் மண்டபத்திற்கு புறப்பட்டார். காலை 7.30 மணிக்கு தேரில் எழுந்தருளினார்.

பின்னர் காலை 9 மணிக்கு தேர் வடம் பிடித்து இழுக்கப்பட்டது. அப்போது ஏராளமான பக்தர்கள் ரெங்கா, ரெங்கா என்ற கோஷத்துடன் வடம் பிடித்து தேரை இழுத்தனர். தேர் நான்கு சித்திரை வீதிகளில் வலம் வந்து காலை 11 மணிக்கு நிலையை வந்தடைந்தது.

அப்போது, தேரின் முன் பக்தர்கள் சூடம், நெய் விளக்கேற்றி தேங்காய் உடைத்து வழிபட்டனர். தேர்த்திருவிழாவையொட்டி பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டிருந்தது. இன்று (30-ந்தேதி) ஆளும் பல்லக்கில் நம்பெருமாள் சித்திரை வீதிகளில் வீதி உலா வந்து பக்தர்களுக்கு காட்சி அளிகிறார். அத்துடன் பங்குனி தேர்த்திருவிழா நிறைவடைகிறது.
Tags:    

Similar News