செய்திகள்
கோப்புபடம்

வேலூர் அருகே விஷம் குடித்து ராணுவ வீரர் தற்கொலை

Published On 2021-02-22 15:01 GMT   |   Update On 2021-02-22 15:01 GMT
வேலூர் அருகே விஷம் குடித்து ராணுவ வீரர் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
வேலூர்:

வேலூரை அடுத்த பொய்கை மோட்டூரைச் சேர்ந்தவர் ஸ்ரீதர். இவரின் மகன் வசந்தகுமார் (வயது 23). ராணுவ வீரரான அவர் லடாக் பகுதியில் பணியாற்றி வந்தார். கடந்த மாதம் விடுமுறையில் சொந்த ஊருக்கு வந்தார். குடும்ப பிரச்சினையால் அவரின் வீட்டில் அடிக்கடி வாக்கு வாதமும், தகராறும் ஏற்பட்டு வந்தது. இதனால் அவர் மனமுடைந்து காணப்பட்டார். கடந்தசில நாட்களாக யாரிடமும் சரியாக பேசாமல் இருந்து வந்தார்.

நேற்று முன்தினம் மாலை வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் வசந்தகுமார் பூச்சிக்கொல்லி மருந்தை (விஷம்) குடித்து விட்டு வீட்டில் மயக்கமடைந்து கிடந்தார். அவரை, குடும்பத்தினர் மீட்டு அடுக்கம்பாறை அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு அவருக்கு முதலுதவி அளித்து, மேல்சிகிச்சைக்காக சென்னை ராஜீவ்காந்தி அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு, சிகிச்சை பலனின்றி நேற்று வசந்தகுமார் பரிதாபமாக உயிரிழந்தார். விரிஞ்சிபுரம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags:    

Similar News