செய்திகள்
கைது

அன்னவாசல் அருகே மயில் வேட்டையாடிய 3 பேர் கைது

Published On 2020-01-13 14:46 GMT   |   Update On 2020-01-13 14:46 GMT
புதுக்கோட்டை மாவட்டம் அன்னவாசல் அருகே மயில்களை வேட்டையாடிய 3 பேரை போலீசார் கைது செய்தனர்.
விராலிமலை:

புதுக்கோட்டை மாவட்டம் அன்னவாசல் போலீசார் வயலோகம் பகுதியில் வாகன தணிக்கையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது அந்த வழியே மூன்று பேர்களுடன் வந்த இரு சக்கர வாகனத்தை நிறுத்தி சோதனையிட்டனர். அதில் ஒரு சாக்குப்பையில் ரோமங்கள் பிடுங்கப்பட்டு இறந்த நிலையில் மறைத்து வைத்திருந்த 3 மயில்கள் மற்றும் ஒரு நாட்டு துப்பாக்கி இருந்ததை பார்த்து போலீசார் அதிர்ச்சியடைந்தனர். 

இதையடுத்து அந்த மூன்று பேரையும் அன்னவாசல் காவல் நிலையத்திற்கு கொண்டு சென்று மேல் விசாரணை நடத்தினர். இதில் அவர்கள் புதுக்கோட்டை மாவட்டம் பொன்னமராவதி அருகேயுள்ள நகரப்பட்டி யைச்சேர்ந்த சத்தியமூர்த்தி மகன் ஆறுமுகம் (வயது 26), சின்னையா மகன் பெருமாள் (25), பழனிவேல் மகன் மூர்த்தி (26) என்றும் தெரியவந்தது.

தொடர்ந்து 3 பேரையும் கைது செய்த போலீசார் மயில் வேட்டைக்கு பயன்படுத்திய ஒரு நாட்டுத்துப்பாக்கி, கைப்பேசி மற்றும் இருசக்கர வாகனத்தை பறிமுதல் செய்து வனத்துறையினரிடம் ஒப்படைத்தனர். 

இதுகுறித்து வழக்குபதிந்த அன்னவாசல் போலீசார் மயிலை உணவுக்காக வேட்டையாடினார்களா அல்லது மருந்து தயாரிக்க எடுத்து சென்றார்களா? என்பது உள்ளிட்ட பல்வேறு கோணங்களில் விசாரணை நடந்து வருகிறது.
Tags:    

Similar News