செய்திகள்
கைது

பொள்ளாச்சியில் சிறுமியை கர்ப்பமாக்கிய மாணவர் போக்சோவில் கைது

Published On 2021-10-26 04:21 GMT   |   Update On 2021-10-26 04:21 GMT
கோவை மாவட்டம் பொள்ளாச்சியில் சிறுமியை கர்ப்பமாக்கிய மாணவரை போலீசார் போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்தனர்.
கோவை:

கோவை மாவட்டம் பொள்ளாச்சி அருகே உள்ள நெகமத்தை சேர்ந்த 16 வயது சிறுமி. இவர் அந்த பகுதியில் உள்ள அரசு பள்ளியில் பிளஸ்-1 படித்து வருகிறார்.

கடந்த சில வருடங்களுக்கு முன்பு சிறுமிக்கு அதே பள்ளியில் பிளஸ்-1 படித்த மாணவர் ஒருவருடன் பழக்கம் ஏற்பட்டது. நாளடைவில் இது காதலாக மாறியது. 2 பேரும் அடிக்கடி நேரில் சந்தித்தும் செல்போனில் பேசியும் தங்களது காதலை வளர்த்து வந்தனர். சிறுமியின் பெற்றோர் வேலைக்கு செல்லும் நேரத்தில் அங்கு செல்லும் சிறுவன் மாணவியிடம் திருமண ஆசை காட்டி உல்லாசம் அனுபவித்து வந்தார். 2 பேரும் அடிக்கடி தனிமையில் சந்தித்து ஜாலியாக இருந்ததால் மாணவி கர்ப்பம் ஆனார்.

சம்பவத்தன்று வீட்டில் இருந்த சிறுமிக்கு திடீரென வயிற்று வலி ஏற்பட்டது. இதனையடுத்து அவரை அவரது பெற்றோர் சிகிச்சைக்காக பொள்ளாச்சி அரசு ஆஸ்பத்திரிக்கு அழைத்து சென்றனர். அங்கு மாணவியை பரிசோதனை செய்தனர். அப்போது மாணவி 3 மாத கர்ப்பமாக இருப்பது தெரிய வந்தது. இது குறித்து டாக்டர்கள் சிறுமியின் பெற்றோரிடம் தெரிவித்தனர். இதனை கேட்ட பெற்றோர் அதிர்ச்சியடைந்தனர்.

பின்னர் மாணவியிடம் கர்ப்பத்துக்கு யார் காரணம் என கேட்டனர். அதற்கு மாணவி கர்ப்பத்துக்கு காரணம் பிளஸ்-2 மாணவர் என தெரிவித்தார். உடனடியாக அவர்கள் இது குறித்து பொள்ளாச்சி அனைத்து மகளிர் போலீசில் புகார் செய்தனர். புகாரின் பேரில் போலீசார் சிறுமியை கர்ப்பமாக்கிய பிளஸ்-2 மாணவரை கைது செய்தனர். அவர் மீது போக்சோ கட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்தனர். பின்னர் அவரை கோர்ட்டில் ஆஜர்படுத்தி சிறுவர் சீர்திருத்த பள்ளியில் அடைத்தனர்.
Tags:    

Similar News