செய்திகள்
பிரதமர் மோடி

கொரோனாவில் அலட்சியம் காட்டினால் ஆபத்து - மோடி எச்சரிக்கை

Published On 2020-11-29 20:54 GMT   |   Update On 2020-11-29 20:54 GMT
கொரோனா வைரஸ் தொடர்பான எந்தவொரு அலட்சியமும் இந்த தருணத்தில்கூட ஆபத்தானதாக மாறக்கூடும் என பிரதமர் நரேந்திர மோடி எச்சரித்தார்.
புதுடெல்லி:

பிரதமர் நரேந்திர மோடி நேற்று வானொலி மூலம் நாட்டு மக்களுடன் ‘மன்கிபாத்’ நிகழ்ச்சியில் பேசுகையில், கொரோனா வைரஸ் தொடர்பான எந்தவொரு அலட்சியமும் இந்த தருணத்தில்கூட ஆபத்தானதாக மாறக்கூடும் என எச்சரித்தார்.

தொடர்ந்து அவர் பேசுகையில், “கொரோனா முதன் முதலாக பரவத்தொடங்கி ஓராண்டு ஆகிறது. நாம் இதை ஒருபோதும் அன்பாக நினைவில் கொள்ள விரும்ப மாட்டோம். உலகம் பல ஏற்றத்தாழ்வுகளை சந்தித்து இருக்கிறது. நாம் ஊரடங்கில் இருந்து வெளியே வந்துள்ளோம். விவாதங்கள் தொடர்கின்றன. நாம் கொரோனாவுக்கு எதிராக உறுதியோடு போராட வேண்டும்” என குறிப்பிட்டார்.
Tags:    

Similar News