செய்திகள்
திருட்டு

மேலூரில் ஒரே நாளில் 4 கடைகளில் அடுத்தடுத்து திருட்டு

Published On 2021-11-23 09:48 GMT   |   Update On 2021-11-23 09:48 GMT
மேலூரில் ஒரே நாளில் 4 கடைகளில் அடுத்தடுத்து திருட்டு நடைபெற்றது. இந்த சம்பவத்தில் ஈடுபட்ட ஆசாமிகளை பிடிக்க போலீசார் தீவிர தேடுதல் வேட்டை நடத்தி வருகின்றனர்.
மேலூர்:

மேலூரில் நீதிமன்றம் முன்பாக உள்ள ஒரு வணிக வளாகத்தில் நள்ளிரவில் புகுந்த ஆசாமிகள் அங்குள்ள அடுத்தடுத்த கடைகளில் பூட்டுக்களை உடைத்து உள்ளனர். அங்குள்ள ஒரு தனியார் இன்சூரன்ஸ் நிறுவனத்தின் அலுவகத்தில் பூட்டை உடைத்த திருடர்கள் பணம் வைத்திருந்த இரும்பு பெட்டகத்தின் பூட்டை உடைக்க முயன்று உள்ளனர். ஆனால் இரும்பு பெட்டகத்தின் பூட்டை உடைக்க முடியாததால் அதில் வைத்திருந்த பணம் தப்பியது.

பின்னர் அருகிலுள்ள செல்போன் ரீசார்ஜ் கடை, டீ கடை, பலசரக்கு கடை ஆகியவற்றின் பூட்டுக்களை உடைத்து உள்ளனர். செல்போன், உதிரிபாகங்கள், பீடி, சிகரெட் பாக்கெட்டுகள் மற்றும் குறைந்தளவு பணம் திருடு போய் உள்ளது.

இந்த திருட்டு சம்பவம் ஒரே நாளில் நடந்து உள்ளது. சம்பந்தப்பட்ட கடைக்காரர்கள் மேலூர் போலீசில் புகார் செய்து உள்ளனர். போலீசார் வழக்குபதிவு செய்து சம்பந்தப்பட்ட ஆசாமிகளை பிடிக்க தீவிர தேடுதல் வேட்டை நடத்தி வருகின்றனர்.


Tags:    

Similar News