செய்திகள்
மேட்டூர் அணை (கோப்புப்படம்)

மேட்டூர் அணைக்கு நீர்வரத்து மேலும் அதிகரிப்பு

Published On 2019-12-04 04:21 GMT   |   Update On 2019-12-04 04:21 GMT
மேட்டூர் அணைக்கு நேற்று 7 ஆயிரத்து 500 கன அடியாக இருந்த நீர்வரத்து இன்று மேலும் அதிகரித்து 8 ஆயிரத்து 500 கன அடியாக வந்து கொண்டிருக்கிறது.
மேட்டூர்:

காவிரி நீர்பிடிப்பு பகுதிகளில் பெய்த மழையால் மேட்டூர் அணைக்கு நீர்வரத்து மீண்டும் படிப்படியாக அதிகரித்து வருகிறது.

நேற்று 7 ஆயிரத்து 500 கன அடியாக இருந்த நீர்வரத்து இன்று மேலும் அதிகரித்து 8 ஆயிரத்து 500 கன அடியாக வந்து கொண்டிருக்கிறது. அணையில் இருந்து நேற்று காவிரியில் 7 ஆயிரம் கன அடி தண்ணீரும், கால்வாயில் 400 கன அடி தண்ணீரும் திறந்து விடப்பட்டது.

இன்று காலை முதல் காவிரியில் தண்ணீர் திறப்பு 8 ஆயிரம் கன அடியாக அதிகரிக்கப்பட்டது. கால்வாயில் வழக்கம் போல 400 கன அடி தண்ணீர் திறந்து விடப்பட்டு வருகிறது. அணைக்கு வரும் தண்ணீரும், அணையில் இருந்து திறந்து விடப்படும் தண்ணீரும் ஒரே அளவாக இருப்பதால் அணையின் நீர்மட்டம் 120 அடியாக நீடிக்கிறது. இதனால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
Tags:    

Similar News