செய்திகள்
118-வது விர்ச்சுவல் தமிழ் மாரத்தான்

கொரோனா பாதிப்பில் இருந்து மீண்ட மா.சுப்பிரமணியன் எம்.எல்.ஏ. 118-வது மாரத்தானில் பங்கேற்றார்

Published On 2021-01-10 19:00 GMT   |   Update On 2021-01-10 19:00 GMT
கொரோனா பாதிப்பில் இருந்து மீண்ட மா.சுப்பிரமணியன் எம்.எல்.ஏ. 118-வது விர்ச்சுவல் தமிழ் மாரத்தானில் பங்கேற்று ஓடினார்.
சென்னை:

சென்னை சைதாப்பேட்டை தொகுதி தி.மு.க. எம்.எல்.ஏ. மா.சுப்பிரமணியன், தொடர்ந்து மாரத்தான் போட்டிகளில் பங்கேற்று வருகிறார். கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் 27-ந்தேதி கொரோனாவால் பாதிக்கப்பட்ட அவர், தன்னை தனிமைப்படுத்திக்கொண்டார்.

கொரோனாவில் இருந்து மீண்ட நிலையில், நேற்று காலை தொடங்கிய விர்ச்சுவல் தமிழ் மாரத்தான் 2021-ல் மா.சுப்பிரமணியன் எம்.எல்.ஏ. பங்கேற்று ஓடினார். இது அவரது 118-வது மாரத்தான் போட்டியாகும். மொத்தம் 21.1 கிலோ மீட்டர் தூரத்தை அவர் ஓடி முடித்தார். அவருடைய நண்பர்கள் வே.ஆனந்தம், எஸ்.ஏ.அரிகிருஷ்ணன், ஸ்ரீராம், மூர்த்தி, என்.சஞ்சீவி, மடிப்பாக்கம் சே.சிந்தன், விஸ்வா ஆகியோரும் உடன் பங்கேற்றனர்.

தமிழ் கலைகள், கலாசாரம் மற்றும் பண்பாட்டிற்கு புத்துயிர் கொடுக்கவும், தமிழக கிராமங்களில் உள்ள மருத்துவம் மற்றும் கல்வி கூடங்களை மேம்படுத்தவும் நிதி திரட்டுவதற்காக நடத்தப்படும் இந்த மாரத்தான் போட்டி வரும் 24-ந்தேதி வரை நடைபெறுகிறது.
Tags:    

Similar News