செய்திகள்
விபத்து பலி

சூளகிரி அருகே மோட்டார் சைக்கிள்கள் மோதல்- வாலிபர் பலி

Published On 2021-04-17 09:59 GMT   |   Update On 2021-04-17 09:59 GMT
சூளகிரி அருகே விபத்தில் வாலிபர் பலியான சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
சூளகிரி:

சூளகிரி அருகே உள்ள எலசமாக்கனபள்ளி கிராமத்தை சேர்ந்தவர் கணேஷ் (வயது 33). விவசாயி. இவருக்கு திருமணமாகி மனைவியும், 2 குழந்தைகளும் உள்ளனர். இவர் நேற்று முன்தினம் ராஜேந்திரன் (55) என்பவருடன், மோட்டார் சைக்கிளில் சூளகிரியில் இருந்து ஊருக்கு வந்து கொண்டு இருந்தார். அப்போது அந்த வழியாக வந்த மற்றொரு மோட்டார் சைக்கிளும், கணேஷ் ஓட்டிச்சென்ற மோட்டார் சைக்கிள் மீது மோதி கொண்டன. இந்த விபத்தில், கணேஷ், ராஜேந்திரன், மற்றொரு மோட்டார் சைக்கிளில் வந்த மேடுபள்ளியை சேர்ந்த அருண்குமார், சந்திரன் ஆகிய 4 பேரும் படுகாயம் அடைந்தனர். இந்த விபத்தில் கணேஷ் இறந்தார். மற்ற 3 பேரும் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இந்த விபத்து குறித்து சூளகிரி போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
Tags:    

Similar News