ஆன்மிகம்
பள்ளிபாளையம் புற்றுமாரியம்மன் கோவிலில் தீச்சட்டி ஊர்வலம்
பள்ளிபாளையம் காவிரி பாலம் அருகே புற்று மாரியம்மன் கோவில் திருவிழாவின் முக்கிய நிகழ்ச்சியாக பக்தர்கள் தீச்சட்டி ஏந்தி ஊர்வலம் வந்தனர். இதில் 300-க்கும் மேற்பட்ட பக்தர்கள் கலந்து கொண்டு தீச்சட்டி எடுத்தனர்.
பள்ளிபாளையம் காவிரி பாலம் அருகே புற்று மாரியம்மன் கோவில் உள்ளது. இந்த கோவிலில் ஆண்டுதோறும் பக்தர்கள் தீச்சட்டி எடுத்து ஊர்வலம் செல்வது வழக்கம். கடந்த ஆண்டு கொரோனாவால் விழா நடைபெறவில்லை.
இந்தாண்டு பூச்சாட்டுதலுடன் விழா தொடங்கியது. விழாவின் முக்கிய நிகழ்ச்சியாக நேற்று இரவு புதன்சந்தை பகுதியில் இருந்து பக்தர்கள் தீச்சட்டி ஏந்தி ஊர்வலம் வந்தனர். ராஜவீதி, பாலம் ரோடு, திருச்செங்கோடு ரோடு வழியாக கோவிலை அடைந்தனர்.
சாமிக்கு சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு தீபாராதனை காண்பிக்கப்பட்டது. பின்னர் பக்தர்களுக்கு பிரசாதம் வழங்கப்பட்டது. இதில் 300-க்கும் மேற்பட்ட பக்தர்கள் கலந்து கொண்டு தீச்சட்டி எடுத்தனர்.
இந்தாண்டு பூச்சாட்டுதலுடன் விழா தொடங்கியது. விழாவின் முக்கிய நிகழ்ச்சியாக நேற்று இரவு புதன்சந்தை பகுதியில் இருந்து பக்தர்கள் தீச்சட்டி ஏந்தி ஊர்வலம் வந்தனர். ராஜவீதி, பாலம் ரோடு, திருச்செங்கோடு ரோடு வழியாக கோவிலை அடைந்தனர்.
சாமிக்கு சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு தீபாராதனை காண்பிக்கப்பட்டது. பின்னர் பக்தர்களுக்கு பிரசாதம் வழங்கப்பட்டது. இதில் 300-க்கும் மேற்பட்ட பக்தர்கள் கலந்து கொண்டு தீச்சட்டி எடுத்தனர்.