செய்திகள்
புதுச்சேரி துணைநிலை கவர்னராக பதவியேற்றார் தமிழிசை சவுந்தரராஜன்

தமிழில் உறுதிமொழி எடுப்பது என் கனவு- தமிழிசை சவுந்தரராஜன்

Published On 2021-02-18 04:54 GMT   |   Update On 2021-02-18 07:11 GMT
பதவிப்பிரமாணத்தின்போது தமிழில் உறுதிமொழி எடுக்க வேண்டும் என்பது என் நீண்டநாள் கனவு என்று புதுச்சேரி துணைநிலை கவர்னராக பொறுப்பேற்ற தமிழிசை சவுந்தரராஜன் கூறினார்.
புதுச்சேரி:

புதுச்சேரி துணைநிலை கவர்னராக பொறுப்பேற்ற தமிழிசை சவுந்தரராஜன் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:

* துணைநிலை கவர்னராக இல்லாமல் மக்களுக்கு துணைபுரியும் சகோதரியாக இருப்பேன்.

* தெலுங்கானா, புதுச்சேரி என இரட்டைக் குழந்தைகளை கையாளும் திறன் மருத்துவரான எனக்கு உள்ளது.

* பதவிப்பிரமாணத்தின்போது தமிழில் உறுதிமொழி எடுக்க வேண்டும் என்பது என் நீண்டநாள் கனவு.

* கொரோனா தடுப்பூசி போட்டுக்கொள்வது மிகவும் குறைவாக இருப்பது வேதனையளிக்கிறது.

* கவர்னர் மற்றும் முதல்வரின் அதிகாரம் என்ன என்பது எனக்கு தெரியும். அரசியல் சட்டத்திற்கு உட்பட்டு நகர்வுகளை மேற்கொள்வேன்.

* நாராயணசாமி பெரும்பான்மையை நிரூபிக்கக்கோரி எதிர்க்கட்சியினர் அளித்த புகார் குறித்து ஆலோசித்து சட்டப்படி முடிவெடுப்பேன்.

* கவர்னரை மக்கள் எளிதில் சந்திக்கக்கூடிய வகையில் தடுப்புகள் அகற்றப்பட்டுள்ளன.

இவ்வாறு அவர் கூறினார்.

புதுவை துணைநிலை ஆளுநராக தமிழிசை சவுந்தரராஜன் பதவியேற்றபோது தமிழில் உறுதிமொழி ஏற்றது குறிப்பிடத்தக்கது.
Tags:    

Similar News