ஆன்மிகம்
வாழ்வில் தடைகளை ஏற்படுத்தும் சாபங்கள்

வாழ்வில் தடைகளை ஏற்படுத்தும் சாபங்கள்

Published On 2019-11-28 07:44 GMT   |   Update On 2019-11-28 07:44 GMT
சாப விமோசனங்களைத் தரும் ஸ்தலங்களுக்குச் சென்று வழிபட்டு வந்தால் படிப்படியாக தடைகள் விலகும். குடும்பத்தில் மகிழ்ச்சி குடியேறும்.
சாபங்களில் பல வகை உள்ளன. அவற்றைப் பற்றி இங்கே பார்க்கலாம். முன்னோர் சாபம், பித்ரு சாபம், மாத்ரு சாபம், பெண் சாபம், பிரேத சாபம், சர்ப்ப சாபம், கோ சாபம், தேவ சாபம், விருட்ச சாபம், ரிஷி சாபம், குலதெய்வ சாபம், குரு சாபம், நீர்நிலை சாபம் என்று பலவகை சாபங்கள் உண்டு.

அவற்றைக் கண்டறிந்து அவை நீங்குவதற்கான வழிபாடுகளை மேற்கொண்டால் வாழ்வில் வளம் காண இயலும். அந்த சாபங்களின் காரணமாக பல குடும்பங்களில் காலம், காலமாக காரியத் தடைகள் உருவாகும். கல்யாணம் தாமதப்படும். பிள்ளைப்பேறு தாமதிக்கும். உறவுகளில் விரிசல் ஏற்படும்.

வறுமையில் வாடும் சூழ்நிலை கூட ஒரு சிலருக்கு ஏற்படலாம். அவற்றைக் கண்டறிந்து சாப விமோசனங்களைத் தரும் ஸ்தலங்களுக்குச் சென்று வழிபட்டு வந்தால் படிப்படியாக தடைகள் விலகும். குடும்பத்தில் மகிழ்ச்சி குடியேறும்.
Tags:    

Similar News