செய்திகள்
கோப்புபடம்

தஞ்சை அருகே தூக்குப்போட்டு தொழிலாளி தற்கொலை

Published On 2020-10-16 07:44 GMT   |   Update On 2020-10-16 07:44 GMT
தஞ்சை அருகே தூக்குப்போட்டு தொழிலாளி தற்கொலை செய்து கொண்ட சம்பவம் குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
தஞ்சாவூர்:

தஞ்சை அடுத்த மாரியம்மன் கோவில், வீரபாண்டியன் நகரை சேர்ந்த ரமேஷ்குமார் மகன் சுரேஷ் (வயது 19). சுமைதூக்கும் தொழிலாளி. இவருடைய பெற்றோர் இறந்து விட்டனர். இந்நிலையில் நேற்று முன்தினம் சுரேஷ் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். 

இதுகுறித்த புகாரின் பேரில் தஞ்சை தாலுகா போலீசார் வழக்குப்பதிவு செய்து, சுரேஷ் தற்கொலை செய்து கொண்ட காரணம் குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
Tags:    

Similar News