ஆன்மிகம்
தேய்பிறை அஷ்டமியையொட்டி காலபைரவருக்கு சிறப்பு அபிஷேகம்

தேய்பிறை அஷ்டமியையொட்டி காலபைரவருக்கு சிறப்பு அபிஷேகம்

Published On 2021-05-04 05:02 GMT   |   Update On 2021-05-04 05:02 GMT
தஞ்சை ரெயில் நிலையம் பின்புறம் அமைந்துள்ள காலபைரவர் கோவிலில் தேய்பிறை அஷ்டமியையொட்டி பைரவருக்கும், விநாயகருக்கும் பல்வேறு பொருட்களால் அபிஷேகம் செய்யப்பட்டது.
தஞ்சை ரெயில் நிலையம் பின்புறம் அமைந்துள்ள காலபைரவர் கோவிலில் நேற்று தேய்பிறை அஷ்டமியையொட்டி சிறப்பு வழிபாடு நடந்தது. தொடர்ந்து பைரவருக்கும், விநாயகருக்கும் பல்வேறு பொருட்களால் அபிஷேகம் செய்யப்பட்டது.

பின்னர் சிறப்பு அலங்காரத்தில் பைரவர் பக்தர்களுக்கு அருள்பாலித்தார். இதில் திரளான பக்தர்கள் முக கவசம் அணிந்து சாமி தரிசனம் செய்தனர்.
Tags:    

Similar News