ஆன்மிகம்
பாலைவனநாதர்

திருப்பாலைத்துறை பாலைவனநாதர் கோவிலில் அன்னாபிஷேகம்: திரளான பக்தர்கள் தரிசனம்

Published On 2021-10-22 03:57 GMT   |   Update On 2021-10-22 03:57 GMT
பாபநாசம் திருப்பாலைத்துறை பாலைவனநாதர் கோவிலில் அன்னாபிஷேகத்தையொட்டி பாலைவனநாதர் தவள வெண்ணகை அம்மன், விநாயகர், வள்ளி, தெய்வானை, சுப்பிரமணியர் உள்ளிட்டோருக்கு சிறப்பு அபிஷேக அலங்காரம் நடைபெற்றது.
பாபநாசம் திருப்பாலைத்துறை பாலைவனநாதர் கோவிலில் அன்னாபிஷேகம் நடைபெற்றது. இதையொட்டி பாலைவனநாதர் தவள வெண்ணகை அம்மன், விநாயகர், வள்ளி, தெய்வானை, சுப்பிரமணியர் உள்ளிட்டோருக்கு சிறப்பு அபிஷேக அலங்காரம் நடைபெற்றது.

தொடர்ந்து அரிசி சாதம் கலந்த பல்வேறு காய், கனிகளை கொண்டு பாலைவனநாதருக்கு அபிஷேகம் நடைபெற்றது. இதில் திரளான பக்தர்கள் கலந்துகொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

இதற்கான ஏற்பாடுகளை இந்து சமய அறநிலையத்துறையினர், பாபநாசம் இறைவழி மன்ற நிர்வாகிகள், பாபநாசம், திருப்பாலத்துறை கிராமமக்கள் செய்திருந்தனர்.

Tags:    

Similar News