லைஃப்ஸ்டைல்
கர்ப்பத்தின் நான்காம் மாதம்

நான்காம் மாதம்: பிரகாசிக்கும் புதிய நம்பிக்கை

Published On 2020-09-28 06:32 GMT   |   Update On 2020-09-28 06:32 GMT
கர்ப்பத்தின் நான்காம் மாதத்தில் கர்ப்பிணிக்கு புதிய நம்பிக்கை பிறக்கும். அபார்ஷன் ஆகிவிடுமோ என்ற பயம் இந்த மாதத்தில் நீங்கிவிடுவதுதான் அதற்கான காரணம்.
கர்ப்பத்தின் நான்காம் மாதத்தில் கர்ப்பிணிக்கு புதிய நம்பிக்கை பிறக்கும். அபார்ஷன் ஆகிவிடுமோ என்ற பயம் இந்த மாதத்தில் நீங்கிவிடுவதுதான் அதற்கான காரணம். குமட்டலும், வாந்தியும் குறைந்துபோகும். கர்ப்பிணியின் உடலில் ரத்தத்தின் அளவு அதிகரிக்கும். இந்த மாதத்தில் குழந்தையின் உருவம் முழுவடிவம் பெற்றுவிடும். குழந்தை விரல் சப்பவும் தொடங்கும். பெரும்பாலான உடல் உபாதைகள் குறைந்துவிடுவதால் கர்ப்பிணிகள் முகத்தில் மகிழ்ச்சி பூக்கும்.

* அடிக்கடி சிறுநீர் கழிக்கவேண்டும் என்ற உணர்வும் நான்காம் மாதத்தில் குறையும்.

* குறிப்பிட்ட உணவுகள் மீதுள்ள வெறுப்பு நீங்கும். அடிவயிறு பெரிதாகிக்கொண்டிருப்பதை கர்ப்பிணிகளால் உணரமுடியும்.

* 14-வது வாரம் ஆகும்போது சிசு சற்று பெரிய கொய்யா பழம் அளவுக்கு வளர்ந்திருக்கும்.

* கர்ப்பிணிகளின் மார்பகங்களும் பெரிதாகியிருக்கும்.

* தொப்புளில் இருந்து கீழ்நோக்கி தெரியும் கோடு கறுப்பாகத் தோன்றத் தொடங்கும்.

* சிசுவின் உடல் உறுப்புகள் முழு வடிவம் பெற்றுவிடுவதால், சிசுவின் முக பாவங்களை ஸ்கேனில் காணமுடியும்.

* சிசு 11 செ.மீ. நீளமும், 140 கிராம் எடையும் கொண்டிருக்கும்.

* 15 முதல் 18-வது வாரங்களில் ஸ்கேனிங் பரிசோதனையில் டவுன் சின்ட்ரோம், நியூரல் டியூப் பாதிப்புகள் இருந்தால் கண்டறியலாம்.

* நெகட்டிவ் குரூப் ரத்த பிரிவைக்கொண்ட கர்ப்பிணிகளுக்கு இந்த 4-வது மாதத்தில்கூட அபார்ஷன் ஆகும் வாய்ப்பு இருப்பதால் கவனம் தேவைப்படும்.

* சிசுவை சுற்றியிருக்கும் நீரை எடுத்து மரபணுரீதியான பரிசோதனைகளை மேற்கொள்ளலாம்.

* இரும்பு மற்றும் கால்சிய சத்து மாத்திரைகளை டாக்டரின் ஆலோசனைபடி உட்கொள்ளவேண்டும்.

* இடுப்பு எலும்பின் இணைப்புகளில் நெகிழ்வுகள் ஏற்படுவதால் சில நேரங்களில் அடிவயிற்று வலியும், அவஸ்தையும் ஏற்படலாம்.

* டாக்டரின் ஆலோசனைபடி உடற்பயிற்சிகளை மேற்கொள்ளலாம்.

* நான்காவது மாதத்தில் கர்ப்பிணிகளுக்கு நன்றாக வியர்க்கும். அதனால் தினமும் இருமுறை குளிப்பது நல்லது. உடலை சுகாதாரமாகவும் வைத்துக்கொள்ளவேண்டும்.

* இந்த காலகட்டத்தில் அடிக்கடி பதற்றமும், மனஅழுத்தமும் ஏற்படும். அவைகளை கட்டுப்படுத்தி மனதை அமைதிப்படுத்த பயிற்சியாளரின் வழிகாட்டுதலோடு யோகா செய்யலாம். கர்ப்பிணிகளுக்கு ஏற்படும் மனஅழுத்த பாதிப்புகள் சிசுவையும் தாக்கும்.

* கர்ப்பிணிக்கு அதிக ரத்தம் தேவைப்படுவதால், உடலில் ரத்தத்தின் அளவு அதிகரிக்கும். அதனால் ரத்த அழுத்தம் அதிகரிக்கக்கூடும். இதயத் துடிப்பும் அதிகரிக்கலாம்.

* இந்த மாதத்திலிருந்து தாம்பத்ய உறவு மேற்கொண்டால், கர்ப்பிணி கீழே படுக்கும் நிலையில் உறவை அமைத்துக்கொள்ளக்கூடாது.

* வீட்டு வேலைகளை செய்துகொண்டிருக்கவேண்டும். உடற்பயிற்சிகளும் மேற்கொண்டால் கர்ப்பிணிகளுக்கு கூடுதல் ஆரோக்கியம் கிடைக்கும். தரையில் படுத்த நிலையில் செய்யும் உடற்பயிற்சிகளை இந்த மாதத்தில் தவிர்த்துவிடவேண்டும். தினமும் அரை மணி நேரம் சாதாரண நிலையில் பயிற்சிகளை மேற்கொள்ளலாம்.

* வழக்கமான உடல் பரிசோதனையில் எடை, ரத்த அழுத்தம் போன்றவைகளை கண்காணிக்கவேண்டும். டெட்டனஸ் தடுப்பூசியின் முதல் ‘டோஸ்’ எடுத்துக்கொள்ளவேண்டும்.

* மாமிச உணவுகளை உட்கொள்ளலாம். முட்டை, பால், பாலாடைக்கட்டி, மீன், பயறுவகைகள், பீன்ஸ் போன்றவைகளை போதுமான அளவில் உணவில் சேர்த்துக்கொள்ளுங்கள்.
Tags:    

Similar News