செய்திகள்
வெள்ளகோவில் போலீஸ் நிலையத்தில் இன்ஸ்பெக்டர் நியமிக்க வலியுறுத்தல்
வெள்ளகோவில் போலீஸ் நிலையத்தில் வழக்கமான பணிகளும், ரோந்து பணிகளும் சுணக்கம் அடைந்து விட்டது.
வெள்ளகோவில்:
வெள்ளகோவில் நகராட்சி பகுதியில் 200க்கும் மேற்பட்ட ஓ.இ., ஸ்பின்னிங் மில், எண்ணெய் மில்களில் 20 ஆயிரத்துக்கும் மேற்பட்ட புலம் பெயர்ந்து வந்துள்ள தொழிலாளர்கள் பணியாற்றுகின்றனர். கோவை-திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் அமைந்துள்ள இப்பகுதியில் அடிக்கடி சாலை விபத்து ஏற்படுகிறது.
வாகன விபத்தில் இறப்பு மற்றும் கொலை, கொள்ளை, நகை திருட்டு, வாகனங்கள் காணாமல்போவது என குற்றச்சம்பவங்கள் அதிகரித்து வருகிறது. போலீஸ் நிலையத்தில் இன்ஸ்பெக்டராக பணிபுரிந்து வந்த பார்த்திபன் கடந்த 6 மாதங்களுக்கு முன் எஸ்.பி., அலுவலகத்துக்கு மாற்றப்பட்டார்.
சப்-இன்ஸ்பெக்டர் விஜயபாஸ்கர், தாராபுரம் போலீஸ் நிலையத்திற்கு மாறுதலாகி சென்று விட்டார். அதிகாரிகள் இல்லாததால் வெள்ளகோவில் போலீஸ் நிலையத்தில் வழக்கமான பணிகளும், ரோந்து பணிகளும் சுணக்கம் அடைந்து விட்டது.
எனவே பொதுமக்கள் பாதுகாப்பு மற்றும் குற்றச்சம்பவங்கள் தடுப்பு பணி ரோந்து ஆகியவற்றை கண்காணித்து நிர்வகிக்க உடனே இன்ஸ்பெக்டர் பணியிடத்தை நிரப்ப வேண்டுமென பொதுமக்கள் எதிர்பார்த்துள்ளனர்.