ஆட்டோமொபைல்
ஹீரோ மோட்டார்சைக்கிள்

உற்பத்தியில் புது மைல்கல் கடந்த ஹீரோ மோட்டோகார்ப்

Published On 2021-01-21 11:37 GMT   |   Update On 2021-01-21 11:37 GMT
ஹீரோ மோட்டோகார்ப் நிறுவனம் வாகனங்கள் உற்பத்தியில் புது மைல்கல் கடந்துள்ளது.


ஹீரோ மோட்டோகார்ப் நிறுவனம் உற்பத்தியில் 10 கோடி யூனிட்களை கடந்துள்ளதாக அறிவித்து இருக்கிறது. 10 கோடியை குறிக்கும் யூனிட் உத்தரகாண்ட் மாநிலத்தின் ஹரித்வார் ஆலையில் உருவாக்கப்பட்டு இருக்கிறது. இது எக்ஸ்டிரீம் 160ஆர் ஆகும்.

கடந்த ஏழு ஆண்டுகளில் மட்டும் ஹீரோ மோட்டோகார்ப் நிறுவனம் 5 கோடி யூனிட்களை உற்பத்தி செய்ததாக தெரிவித்து இருக்கிறது. மேலும் உலகின் மிகப்பெரும் இருசக்கர வாகன உற்பத்தியாளர் என்ற பட்டத்தை தொடர்ந்து 20-வது ஆண்டாக ஹீரோ மோட்டோகார்ப் தக்கவைத்து கொண்டுள்ளது.



புது மைல்கல்லை கொண்டாடும் வகையில் ஸ்பிளென்டர் பிளஸ், கிளாமர், பேஷன் ப்ரோ, எக்ஸ்டிரீம் 160ஆர், மேஸ்ட்ரோ எட்ஜ் 110 மற்றும் டெஸ்டினி 125 போன்ற மாடல்களின் செலபிரேஷன் எடிஷன் வேரியண்ட்டை ஹீரோ மோட்டோகார்ப் நிறுவன தலைமை செயல் அதிகாரி பவன் முஞ்சால் அறிமுகம் செய்தார். புதிய செலபிரேஷன் எடிஷன் மாடல்கள் பிப்ரவரி 2021 வாக்கில் விற்பனைக்கு வர இருக்கின்றன. 
Tags:    

Similar News