செய்திகள்
ராமநாதபுரம் அருகே மதுவிற்ற 13 பேர் கைது
ராமநாதபுரம் அருகே மதுவிற்ற 13 பேரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
ராமநாதபுரம்:
ராமநாதபுரம் மாவட்டத்தில் கள்ளத்தனமாக மதுவிற்பனை செய்வதை தடுக்கும் வகையில் மாவட்ட மதுவிலக்கு போலீசார் மற்றும் அந்தந்த பகுதி போலீசார் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டனர். இதன்படி நேற்று முன்தினம் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் கள்ளத்தனமாக மதுவிற்பனை செய்ததாக பெண் உள்பட 13 பேரை போலீசார் கைது செய்தனர். இவர்களிடம் இருந்து 198 மதுபாட்டில்கள், ரூ.820-ஐ போலீசார் பறிமுதல் செய்தனர்.