செய்திகள்
கைது

ராமநாதபுரம் அருகே மதுவிற்ற 13 பேர் கைது

Published On 2020-09-26 11:41 GMT   |   Update On 2020-09-26 11:41 GMT
ராமநாதபுரம் அருகே மதுவிற்ற 13 பேரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
ராமநாதபுரம்:

ராமநாதபுரம் மாவட்டத்தில் கள்ளத்தனமாக மதுவிற்பனை செய்வதை தடுக்கும் வகையில் மாவட்ட மதுவிலக்கு போலீசார் மற்றும் அந்தந்த பகுதி போலீசார் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டனர். இதன்படி நேற்று முன்தினம் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் கள்ளத்தனமாக மதுவிற்பனை செய்ததாக பெண் உள்பட 13 பேரை போலீசார் கைது செய்தனர். இவர்களிடம் இருந்து 198 மதுபாட்டில்கள், ரூ.820-ஐ போலீசார் பறிமுதல் செய்தனர்.
Tags:    

Similar News