செய்திகள்
கோப்பு படம்

கொரோனாவுக்கு சிகிச்சை பெற்று வரும் 47 ஆயிரம் பேர் - மாவட்ட வாரியாக விவரம்

Published On 2020-09-13 16:24 GMT   |   Update On 2020-09-13 16:24 GMT
தமிழகத்தில் கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டவர்களில் 47 ஆயிரத்து 12 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். மாவட்ட வாரியாக விவரத்தை காண்போம்.
சென்னை:

தமிழகத்தில் இன்று 5 ஆயிரத்து 693 பேருக்கு புதிதாக கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

இதனால் மாநிலத்தில் வைரஸ் பரவியவர்களின் மொத்த எண்ணிக்கை 5 லட்சத்து 2 ஆயிரத்து 759 ஆக அதிகரித்துள்ளது. இதில் வெளிநாடுகள் மற்றும் வெளிமாநிலங்களில் இருந்து வந்தவர்களும் உள்ளடக்கம் ஆகும்.

வைரஸ் பாதிப்பு உறுதி செய்யப்பட்டவர்களில் 47 ஆயிரத்து 12 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். இதில் சிலர் தங்கள் வீடுகளில் தனிமைப்படுத்தப்பட்டு சிகிச்சை பெற்றும் வருகின்றனர். 

மேலும், கொரோனா பாதிப்பில் இருந்து இன்று 5 ஆயிரத்து 717 பேர் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளனர்.

இதனால் மாநிலத்தில் வைரஸ் பாதிப்பில் இருந்து குணமடைந்தோர் எண்ணிக்கை 4 லட்சத்து 47 ஆயிரத்து 366 ஆக அதிகரித்துள்ளது.

ஆனாலும், வைரஸ் தாக்குதலுக்கு இன்று 74 பேர் உயிரிழந்துள்ளனர். இதனால் தமிழகத்தில் கொரோனாவுக்கு பலியானோர் எண்ணிக்கை 8 ஆயிரத்து 381 ஆக உயர்ந்துள்ளது.

கொரோனாவுக்கு சிகிச்சை பெற்று வருபவர்கள் மாவட்ட வாரியாக விவரம் (வீட்டு தனிமைப்படுத்தப்படுத்தல் உள்பட):-

அரியலூர் - 227
செங்கல்பட்டு - 1,987
சென்னை - 10,393
கோவை - 3,495
கடலூர் - 2,966
தர்மபுரி - 697
திண்டுக்கல் - 762
ஈரோடு - 1,043
கள்ளக்குறிச்சி - 910
காஞ்சிபுரம் - 1,273
கன்னியாகுமரி - 736
கரூர் - 397
கிருஷ்ணகிரி - 858 
மதுரை - 892
நாகை - 1,136
நாமக்கல் - 912
நீலகிரி - 549
பெரம்பலூர் - 112
புதுக்கோட்டை - 786
ராமநாதபுரம் - 244
ராணிப்பேட்டை - 690
சேலம் - 1,982
சிவகங்கை - 236
தென்காசி - 553
தஞ்சாவூர் - 877
தேனி - 786
திருப்பத்தூர் - 492
திருவள்ளூர் - 2,087
திருவண்ணாமலை - 1,539
திருவாரூர் - 700
தூத்துக்குடி - 681
திருநெல்வேலி - 1,072
திருப்பூர் - 1,717
திருச்சி - 891
வேலூர் - 932
விழுப்புரம் - 880
விருதுநகர் - 436
விமானநிலைய கண்காணிப்பு 
வெளிநாடு - 16
உள்நாடு - 68
ரெயில் நிலைய கண்காணிப்பு - 2

மொத்தம் - 47,012
Tags:    

Similar News