செய்திகள்
திருவையாறு அருகே திண்ணையில் இருந்து தவறி விழுந்த முதியவர் பலி
திருவையாறு அருகே திண்ணையில் இருந்து தவறி விழுந்த முதியவர் பலியான சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
திருவையாறு:
திருவையாறு அடுத்த வளப்பக்குடி நடுத்தெருவை சேர்ந்தவர் கணக்கப்பிள்ளை(வயது60). இவர் கடந்த 29-ம் தேதி அங்குள்ள முனியாண்டவன் கோவில் அருகே திண்ணையில் படுத்திருந்த போது தடுமாறி கீழே விழுந்துவிட்டார். இதில் காயமடைந்த அவரை மீட்டு தஞ்சை மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். அங்கு சிகிச்சை பலனளிக்காமல் அவர் நேற்று இறந்துவிட்டார்.
இது குறித்து அவரது மகன் பாலசுப்பிரமணியன் கொடுத்த புகாரின்பேரில் மருவூர் சப்-இன்ஸ்பெக்டர் ஆனந்தன் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.