செய்திகள்
பாகிஸ்தான்

பாகிஸ்தானில் 3 பயங்கரவாதிகள் சுட்டுக்கொலை- காவல்துறை அதிரடி

Published On 2021-10-21 09:53 GMT   |   Update On 2021-10-21 09:53 GMT
கைபர் பாக்துன்க்வா மற்றும் பலுசிஸ்தான் மாகாணங்களில் கடந்த சில மாதங்களாக பயங்கரவாத நடவடிக்கைகள் அதிகரித்து வருகின்றன.
பெஷாவர்:

பாகிஸ்தானின் கைபர் பாக்துன்க்வா மாகாணத்தில் டிடிபி பயங்கரவாத அமைப்பைச் சேர்ந்த 3 பயங்கரவாதிகளை போலீசார் சுட்டுக்கொன்றுள்ளனர். ஷாபூர் பகுதியில் பயங்கரவாதிகள் பதுங்கியிருப்பதாக உளவுத்துறை அளித்ததகவலின்படி அங்கு சுற்றி வளைத்த போலீசார் தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர். அப்போது நடந்த துப்பாக்கிச் சண்டையில் 3 பயங்கரவாதிகள் கொல்லப்பட்டுள்ளனர். 

கொல்லப்பட்டவர்களில் ஒருவரின் பெயர் ஹிஸ்புல்லா என அடையாளம் காணப்பட்டிருப்பதாக அதிகாரிகள் தெரிவித்தனர். தப்பி ஓடிய பயங்கரவாதிகளை தேடும் பணி  நடைபெறுகிறது.

கைபர் பாக்துன்க்வா மற்றும் பலுசிஸ்தான் மாகாணங்களில் கடந்த சில மாதங்களாக பயங்கரவாத நடவடிக்கைகள் அதிகரித்து வருகின்றன. நேற்று கைபர் பாக்துன்க்வா மாகாணம் தியாரா பண்டகாய் பகுதியில் சக்திவாய்ந்த குண்டு வெடித்ததில் பாதுகாப்பு படையைச் சேர்ந்த 4 பேர் உயிரிழந்தனர். இதேபோல், சீனா-பாகிஸ்தான் பொருளாதார பாதை பணியில் ஈடுபட்டுள்ள சீனர்களை குறிவைத்தும் தாக்குதல் நடத்தப்படுகிறது.
Tags:    

Similar News