செய்திகள்
முக ஸ்டாலின்

திமுக கிராம சபை கூட்டத்தால் 9 ஆண்டுகளாக எரியாத தெரு விளக்கு எரிந்தது- முக ஸ்டாலின் பெருமிதம்

Published On 2021-01-12 06:50 GMT   |   Update On 2021-01-12 06:50 GMT
திமுக கிராம சபை கூட்டத்தால் 9 ஆண்டுகளாக எரியாத தெரு விளக்கு எரிந்தது என்று திமுக தலைவர் முக ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

சென்னை:

தி.மு.க. தலைவர் மு.க. ஸ்டாலின் தனது முகநூல் பதிவில் கூறி இருப்பதாவது:-

மு.க.ஸ்டாலின் கிராம சபை நடத்துகிறாரே அதனால் என்ன பயன், அவர் என்ன பிரச்சினையைத் தீர்க்கப் போகிறாரா? என்று சில நாட்களுக்கு முன் கேட்டார் முதல்-அமைச்சர். ஆம் நான் பிரச்சினைகளைத் தீர்ப்பவன் தான். இதோ ஓர் ஆதாரம்.

கவுண்டம்பாளையம் தொகுதி வெள்ளக்கிணறுவில் நடைபெற்ற கிராம சபையில் அதிக வரி செலுத்தும் எங்கள் வீதியில் தெரு விளக்கு இல்லாததை 9 ஆண்டுகளாக கண்டுகொள்ளப்படவில்லை என்று ஒருவர் சொன்னார். இன்று அரசு சார்பில் தெரு விளக்கு அமைத்துக் கொடுத்துள்ளார்கள்.

யாரிடம் சொன்னால் வேலை நடக்கும் என்பது மக்களுக்குத் தெரியும் முதல்-அமைச்சர் பழனிசாமி அவர்களே!

இவ்வாறு அதில் அவர் பதிவிட்டுள்ளார்.

Tags:    

Similar News