செய்திகள்
கொரோனா வைரஸ்

நாமக்கல் மக்களவை தொகுதி எம்பிக்கு கொரோனா

Published On 2020-11-22 02:13 GMT   |   Update On 2020-11-22 02:13 GMT
நாமக்கல் மக்களவை தொகுதி எம்பி ஏகேபி சின்ராஜ்க்கு கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.
நாமக்கல்:

கொரோனாவால் பொதுமக்கள் மட்டுமின்றி நோய் பரவல் தடுப்பு பணியில் ஈடுபடும் அரசு அலுவலர்கள், ஊழியர்கள், சிகிச்சை அளித்து வரும் டாக்டர்கள், செவிலியர்கள், ஊழியர்களும் பாதிப்புக்கு உள்ளாகி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்கள்.

இந்த நிலையில், நாமக்கல் மக்களவை தொகுதி எம்பி ஏகேபி சின்ராஜ்க்கு கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.

கொரோனா தொற்று உறுதியான எம்பி சின்ராஜ் பெருந்துறை அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
Tags:    

Similar News