ஆன்மிகம்
திருப்பதி கபிலேஸ்வரசாமி கோவிலில் திருச்சி, அதிகாரநந்தி வாகன சேவை

திருப்பதி கபிலேஸ்வரசாமி கோவில் வருடாந்திர பிரம்மோற்சவ விழாவில் அதிகாரநந்தி வாகன சேவை

Published On 2021-03-09 07:51 GMT   |   Update On 2021-03-09 07:51 GMT
திருப்பதி கபிலேஸ்வரசாமி கோவிலில் வருடாந்திர பிரம்மோற்சவ விழாவில் அதிகார நந்தி வாகன சேவை நடந்தது. அதில் உற்சவர் கபிலேஸ்வரசாமி சிறப்பு அலங்காரத்தில் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.
திருப்பதி கபிலேஸ்வரசாமி கோவிலில் வருடாந்திர பிரம்மோற்சவ விழா நடந்து வருகிறது. விழாவின் 5-வது நாளான நேற்று காலை திருச்சி உற்சவம் நடந் தது. அதில் உற்சவர் சோமஸ்கந்தமூர்த்தி, காமாட்சி தாயார் சிறப்பு அலங்காரத்தில் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள் பாலித்தனர்.

அதைத்தொடர்ந்து இரவு அதிகார நந்தி வாகன சேவை நடந்தது. அதில் உற்சவர் கபிலேஸ்வரசாமி சிறப்பு அலங்காரத்தில் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள் பாலித்தார்.

விழாவில் கோவில் துணை அதிகாரி சுப்பிரமணியம், கோவில் கண்காணிப்பாளர் பூபதி, கோவில் ஆய்வாளர்கள் ரெட்டிசேகர், சீனிவாஸ்நாயக் மற்றும் அதிகாரிகள் பலர் கலந்து கொண்டனர்.
Tags:    

Similar News