உள்ளூர் செய்திகள்
நிழல் பந்தல்

அரசு ஆரம்ப சுகாதார நிலையம் முன்பு நிழல் பந்தல் அமைக்க கோரிக்கை

Published On 2022-04-16 09:46 GMT   |   Update On 2022-04-16 09:46 GMT
சிகிச்சைக்காக காத்திருக்கும் கர்ப்பிணிகள், தாய்மார்கள் திறந்த வெளியில் வெயிலில் நிற்க வேண்டி உள்ளது.
பல்லடம்:

பல்லடம் அருகே உள்ள ஆறுமுத்தாம்பாளையம் கிராமத்தில் அரசு துணை சுகாதார நிலையம் செயல்பட்டு வருகிறது. இந்தநிலையில் சுகாதார நிலையம் முன்பு பந்தல் எதுவும் அமைக்கப்படாததால் சிகிச்சைக்காக வரும் நோயாளிகள் மற்றும் இங்கு தடுப்பூசி செலுத்த வரும் கர்ப்பிணிகள் வெயிலில் காத்திருக்க வேண்டிய நிலை உள்ளது. 

இதுகுறித்து அங்குள்ள பொதுமக்கள் கூறுகையில்:

இந்த துணை சுகாதார நிலையத்திற்கு பல்வேறு பகுதியில் இருந்து கர்ப்பிணிகள், தாய்மார்கள் வருகின்றனர். வாரம் ஒரு நாள் வரும் கர்ப்பிணிகள், காத்திருந்து தடுப்பூசி செலுத்த வேண்டிய நிலை உள்ளது. இந்தநிலையில் சுகாதார நிலையம் முன்பு பந்தல் எதுவும் அமைக்கப்படாததால் சிகிச்சைக்காக காத்திருக்கும் கர்ப்பிணிகள், தாய்மார்கள் திறந்த வெளியில் வெயிலில் நிற்க வேண்டி உள்ளது.

எனவே கர்ப்பிணிகள், தாய்மார்களின் நலனை கருத்தில் கொண்டு நிழல் பந்தல் அமைக்கவும், அவர்கள் அமர்வதற்கான நாற்காலி வசதி ஏற்படுத்தவும் சுகாதாரத்துறையினர் நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அவர்கள் தெரிவித்தனர்.
Tags:    

Similar News