செய்திகள்
கைது

நெல்லை அருகே கர்ப்பிணியை மிரட்டிய 3 வாலிபர்கள் கைது

Published On 2021-03-13 09:52 GMT   |   Update On 2021-03-13 09:52 GMT
நெல்லை அருகே கர்ப்பிணி பெண்ணுக்கு கொலை மிரட்டல் விடுத்தது தொடர்பாக 3 பேரை போலீசார் கைது செய்தனர்.

நெல்லை:

நெல்லை அருகே உள்ள சுத்தமல்லியை அடுத்த மேலக்கல்லூர் பகுதியை சேர்ந்தவர் ரேவதி (வயது 27). இவரது கணவர் சப்பாணி இறந்து விட்டார். ஒரு பெண் குழந்தையுடன் ரேவதி தனியாக வசித்து வருகிறார்.

இந்தநிலையில் ரேவதிக்கும் பக்கத்து வீட்டை சேர்ந்த ஒரு வாலிபருக்கும் கள்ளக்காதல் ஏற்பட்டது. அடிக்கடி அவர்கள் தனிமையில் சந்தித்து வந்தனர்.

இதனால் ரேவதி கர்ப்பமானார். தற்போது அவர் 6 மாத கர்ப்பமாக இருப்பதாக கூறப்படுகிறது.

இந்த விபரம் அந்த வாலிபரின் குடும்பத்திற்கு தெரிந்து, பிரச்சனை ஏற்பட்டது.

இந்த நிலையில்அந்த வாலிபரின் தம்பி முத்துராமன் (22), அவரது நண்பர்கள் உதயகுமார் (27), முத்துச்செல்வன் (24), பொன்மணி ஆகிய 4 பேரும் ரேவதி வீட்டிற்கு சென்று, அவரை அவதூறாக பேசி கொலைமிரட்டல் விடுத்தனர்.

இதுதொடர்பாக ரேவதி சுத்தமல்லி போலீசில் புகார் செய்தார். போலீசார் வழக்குப்பதிவு செய்து முத்துராமன், உதயகுமார், முத்துச்செல்வன் ஆகிய 3 பேரை கைது செய்தனர். பொன்மணியை தேடி வருகிறார்கள்.

Tags:    

Similar News