ஆன்மிகம்
திருநள்ளாறு சனீஸ்வரர் கோவிலில் தங்க ரிஷப வாகனத்தில் தர்பாரண்யேஸ்வரர் வீதியுலா
திருநள்ளாறு சனீஸ்வரர் கோவிலில் தங்க ரிஷப வாகனத்தில் பிரணாம்பிகை சமேத தர்பாரண்யேஸ்வரர் சிறப்பு அலங்காரத்தில் வீதியுலா புறப்பாடு நடைபெற்றது. இதில் பக்தர்கள் கலந்துகொண்டு தரிசனம் செய்தனர்.
காரைக்காலை அடுத்த திருநள்ளாறு உலக பிரசித்திபெற்ற சனீஸ்வரர் கோவிலில் மகா சிவராத்திரி விழா நேற்ற முன்தினம் நடைபெற்றது. இதையொட்டி விடிய விடிய 4 கால பூஜைகள் நடந்தது. இதில் திரளான பக்தர்கள் கலந்துகொண்டு தரிசனம் செய்தனர்.
நேற்று சிறப்பு பூஜைகள் செய்யப்பட்டு, தங்க ரிஷப வாகனத்தில் பிரணாம்பிகை சமேத தர்பாரண்யேஸ்வரர் சிறப்பு அலங்காரத்தில் வீதியுலா புறப்பாடு நடைபெற்றது. இதில் பக்தர்கள் கலந்துகொண்டு தரிசனம் செய்தனர்.
நேற்று சிறப்பு பூஜைகள் செய்யப்பட்டு, தங்க ரிஷப வாகனத்தில் பிரணாம்பிகை சமேத தர்பாரண்யேஸ்வரர் சிறப்பு அலங்காரத்தில் வீதியுலா புறப்பாடு நடைபெற்றது. இதில் பக்தர்கள் கலந்துகொண்டு தரிசனம் செய்தனர்.