செய்திகள்
கைது

விழுப்புரத்தில் மோட்டார் சைக்கிளில் புகையிலை பொருட்கள் கடத்தல்- 2 பேர் கைது

Published On 2020-09-26 11:26 GMT   |   Update On 2020-09-26 11:26 GMT
விழுப்புரத்தில் மோட்டார் சைக்கிளில் புகையிலை பொருட்கள் கடத்திய 2 பேரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
விழுப்புரம்:

விழுப்புரம் நாராயணன் நகர் பகுதியில் இருந்து மோட்டார் சைக்கிளில் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் கடத்தப்படுவதாக கிடைத்த தகவலின்பேரில் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டின் தனிப்படை போலீசார் நேற்று மாலை நாராயணன் நகரில் தீவிர வாகன தணிக்கையில் ஈடுபட்டனர். அப்போது அந்த வழியாக மோட்டார் சைக்கிளில் வேகமாக வந்த 2 பேரை போலீசார் வழிமறித்து அவர்கள் வைத்திருந்த சாக்கு மூட்டைகளை சோதனை செய்ததில் அந்த மூட்டையினுள் 5 ஆயிரம் பாக்கெட்டுகளில் புகையிலை பொருட்கள் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. விசாரணையில் பிடிபட்ட 2 பேரும் விழுப்புரம் கே.கே.சாலையை சேர்ந்த விஜயன் (வயது 33), விழுப்புரம் கே.கே.நகரை சேர்ந்த மணி (47) என்பதும், இந்த புகையிலை பொருட்களை விழுப்புரம் பகுதியில் உள்ள கடைகளுக்கு கொண்டு சென்று விற்பனை செய்வதற்காக கடத்திச்சென்றதும் தெரியவந்தது. இதையடுத்து விஜயன், மணி ஆகிய இருவரையும் போலீசார் கைது செய்து அவர்களிடமிருந்த ரூ.50 ஆயிரம் மதிப்புள்ள புகையிலை பொருட்களை பறிமுதல் செய்தனர்.
Tags:    

Similar News