செய்திகள்
புதுக்கோட்டை அருகே சரக்கு வேன் மோதி விவசாயி பலி
புதுக்கோட்டை அருகே சரக்கு வேன் மோதி விவசாயி பலியான சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
கீரனூர்:
தஞ்சை மாவட்டம் ஆச்சாம்பட்டியை சேர்ந்தவர் திருவேங்கடம் (வயது38). விவசாயியான இவர், புதுக்கோட்டை அருகே கூத்தாச்சிப்பட்டியில் ஒரு துக்க நிகழ்ச்சியில் கலந்து கொள்வதற்காக தனது மோட்டார் சைக்கிளில் வந்து கொண்டிருந்தார். தெம்மாவூர் அருகே வந்தபோது, அந்த வழியாக வந்த சரக்கு வேன் மோட்டார் சைக்கிள் மீது மோதியது. இதில் தூக்கி வீசப்பட்ட திருவேங்கடம் பலத்த காயம் அடைந்து சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார். இது குறித்து உடையாளிப்பட்டி போலீசார் விசாரணை நடத்தி சரக்கு வேன் டிரைவர் தெம்மாவூரை சேர்ந்த லோகநாதன் (37) மீது வழக்குப்பதிவு செய்தனர்.