செய்திகள்
கைது

கோவையில் முதியவரிடம் செல்போன் பறித்தவர் கைது

Published On 2020-10-19 11:47 GMT   |   Update On 2020-10-19 11:47 GMT
கோவையில் முதியவரிடம் செல்போனை பறித்து சென்று தப்பி ஓடிய வாலிபரை பொதுமக்கள் மடக்கி பிடித்து போலீசில் ஒப்படைத்தனர்.
கணபதி:

கோவை கவுண்டம்பாளையம் டி.வி.எஸ்.நகரை சேர்ந்தவர் எபினேசர் (வயது 60). இவர் நேற்று முன்தினம் ரத்தினபுரி பகுதியில் நின்று இருந்தார். அப்போது அங்கு வந்த ஒருவர், தன்னிடம் செல்போன் இல்லாததால், தெரிந்த ஒருவருக்கு பேச செல்போன் கொடுத்து உதவ வேண்டும் என்று கனிவாக கேட்டுள்ளார். 

அதை நம்பிய எபினேசர், செல்போனை கொடுத்து உள்ளார். உடனே அந்த ஆசாமி செல்போனுடன் ஓட்டம் பிடித்தார். இதனால் அதிர்ச்சி அடைந்த எபினேசர் கூச்சல் போட்டார். உடனே அக்கம்பக்கத்தினர் விரைந்து சென்று அந்த மர்ம நபரை மடக்கி பிடித்து ரத்தினபுரி போலீசில் ஒப்படைத்தனர். விசாரணையில், அவர், வெங்கிட்டாபுரத்தை சேர்ந்த சண்முகம் என்ற சங்கர் (20) என்பது தெரியவந்தது. 

இதையடுத்து அவரை போலீசார் கைது செய்தனர். அவரிடம் இருந்து செல்போன் பறிமுதல் செய்யப்பட்டது.
Tags:    

Similar News