செய்திகள்
இந்திய வம்சாவளி பெண் விஞ்ஞானிக்கு மு.க.ஸ்டாலின் வாழ்த்து
நாசாவின் பெர்சவரன்ஸ் ரோவரின் வழிநடத்து குழுவின் தலைவர் சுவாதி மோகனுக்கு மு.க.ஸ்டாலின் வாழ்த்து தெரிவித்துள்ளார்.
சென்னை:
அமெரிக்காவின் நாசா விண்வெளி மையத்தில் இருந்து கடந்த ஆண்டு ஜூலை மாதம் அனுப்பப்பட்ட பெர்சவரன்ஸ் விண்கலம் செவ்வாய் கிரகத்தில் வெற்றிகரமாக தரை இறங்கியுள்ளது.
இதன் வழிநடத்தும் குழுவின் தலைவராக இந்திய வம்சாவளியை சேர்ந்த பெண் விஞ்ஞானி சுவாதி மோகன் உள்ளார். அவருக்கு தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் தனது டுவிட்டர் பக்கத்தில் வாழ்த்து தெரிவித்துள்ளார் அதில் அவர் கூறி இருப்பதாவது:-
நாசாவின் பெர்சவரன்ஸ் ரோவரின் வழிநடத்து குழுவின் தலைவர் சுவாதி மோகனுக்கு வாழ்த்துகள். இது இந்தியாவுக்கும், உலகிற்கும் பெருமை சேர்க்கும் தருணம்.
நாசா ஜே.பி.எல். மற்றும் அதன் அறிவியலாளர்கள் அறிவியலின் புதிய எல்லையை கடந்து, நமது அறிவின் பரப்பை விரிவாக்கம் செய்வதைக் கண்டு வியப்பு கொள்கிறேன்.
இவ்வாறு அவர் கூறியுள்ளார்.
அமெரிக்காவின் நாசா விண்வெளி மையத்தில் இருந்து கடந்த ஆண்டு ஜூலை மாதம் அனுப்பப்பட்ட பெர்சவரன்ஸ் விண்கலம் செவ்வாய் கிரகத்தில் வெற்றிகரமாக தரை இறங்கியுள்ளது.
இதன் வழிநடத்தும் குழுவின் தலைவராக இந்திய வம்சாவளியை சேர்ந்த பெண் விஞ்ஞானி சுவாதி மோகன் உள்ளார். அவருக்கு தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் தனது டுவிட்டர் பக்கத்தில் வாழ்த்து தெரிவித்துள்ளார் அதில் அவர் கூறி இருப்பதாவது:-
நாசாவின் பெர்சவரன்ஸ் ரோவரின் வழிநடத்து குழுவின் தலைவர் சுவாதி மோகனுக்கு வாழ்த்துகள். இது இந்தியாவுக்கும், உலகிற்கும் பெருமை சேர்க்கும் தருணம்.
நாசா ஜே.பி.எல். மற்றும் அதன் அறிவியலாளர்கள் அறிவியலின் புதிய எல்லையை கடந்து, நமது அறிவின் பரப்பை விரிவாக்கம் செய்வதைக் கண்டு வியப்பு கொள்கிறேன்.
இவ்வாறு அவர் கூறியுள்ளார்.