உள்ளூர் செய்திகள்
ஆம்பூரில் பா.ஜ.க.வினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுப்பட்டனர்.
ஆம்பூர்:
பிரதமர் மோடியின் வருகையின் போது உரிய பாதுகாப்பு வழங்காத பஞ்சாப் மாநில காங்கிரஸ் அரசை கண்டித்து பாஜகவினர் ஆம்பூரில் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
ஆம்பூர் பஸ் நிலையத்தில் அம்பேத்கர் சிலை அருகே பாஜக திருப்பத்தூர் மாவட்ட பட்டியல் அணி சார்பாக நடைபெற்ற ஆர்ப் பாட்டத்திற்கு மாவட்ட அணி தலைவர் குப்புசாமி தலைமை தாங்கினார். நகர தலைவர் பிரேம் குமார் முன்னிலை வகித்தார்.
இதில் மாவட்ட தலைவர் வாசுதேவன் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டார். ஆர்ப்பாட்டத்தில் பஞ்சாப் அரசை கண்டித்தும் டிஸ்மிஸ் செய்ய கோரியும் கோஷங்கள் எழுப்பினர்.
இதில் மாநில பொதுக்குழு உறுப்பினர் சிவபிரகாசம், பாஜக வர்த்தக பிரிவு தலைவர் ஆனந்தன் மற்றும் பாஜக நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.