செய்திகள்
வீடு புகுந்து கொள்ளை

திருவாரூர் அருகே வீட்டின் பூட்டை உடைத்து நகை- லேப்டாப் கொள்ளை

Published On 2019-10-09 08:41 GMT   |   Update On 2019-10-09 08:41 GMT
திருவாரூர் அருகே வீட்டின் பூட்டை உடைத்து நகை- லேப்டாப் கொள்ளையடித்த சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

திருவாரூர்:

திருவாரூர் அருகே புகையிலை தோப்பு பகுதியை சேர்ந்தவர் சங்கரன் (வயது 54). இந்த நிலையில் இவர் கடந்த 4-ந் தேதி தனது குடும்பத்தினருடன் வெளியூர் சென்றிருந்தார்.

இதையடுத்து நேற்று சங்கரன் வீடு திரும்பினார். அப்போது வீட்டின் முன்பக்க கதவின் பூட்டு உடைக்கப்பட்டு இருந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்தார்.

வீட்டின் உள்ளே சென்று பார்த்த போது பீரோ உடைக்கப்பட்டு அதில் வைக்கப்பட்டிருந்த 4 பவுன் நகை மற்றும் 2 லேப்டாப்களை மர்ம கும்பல் கொள்ளையடித்து சென்றது தெரியவந்தது.

இந்த கொள்ளை சம்பவம் குறித்து சங்கரன், திருவாரூர் டவுன் போலீசில் புகார் செய்தார். அதன்பேரில் போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து கொள்ளை நடந்த வீட்டை ஆய்வு செய்தனர். பின்னர் இதுகுறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags:    

Similar News